செவ்வாய், 7 ஏப்ரல், 2026

பெண்களின் தற்போதைய நிலை

 பெண்களின் தற்போதைய நிலை 



நேற்று காலை திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழியாக வரவேண்டிய சூழ்நிலை இருந்தது

அப்பொழுது அந்த பல்கலைக்கழகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை ஒருவன் பைக்கில் சுற்றி தொல்லை செய்து கொண்டிருந்தான். வண்டியை நிப்பாட்டி விட்டு அந்த பெண்ணிடம் சென்று ஏதோ சத்தம் போட்டு வண்டியில் ஏற சொல்லி சத்தம் போட்டு கொண்டிருந்தான். நான் காரை நிப்பாட்டி விட்டு இவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். அவள் அவனுடன் செல்ல மறுத்து பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள.

அவன் அங்கும் சென்று அமந்துகொண்டான். அவன் எழுந்து எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள். எனக்கு பொறுமை இல்லை. நான் காவல்துறைக்கு போன் செய்து சொன்னேன். அவர்கள் சரியாக கேட்கவில்லை என்றார்கள். நான் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கூப்பிடுகிறேன். என்னை அழையுங்கள் என்று கூறிவிட்டு வைத்துவிட்டேன். 

நான் பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன், கண்ட்ரோல் ரூமில் இருந்து அழைத்து விசாரித்தார்கள். பிரச்சினையை சொல்லி நான் இங்கேயே இருக்கிறேன் வாருங்கள் என்றேன். அதற்குள் அவன் பெண்ணை பைக்கில் ஏற்றிக்கொண்டு தென்காசி பக்கம் சென்று விட்டான். 

காவல்துறையினர் வந்து விட்டார்கள். அவர்களிடம் விவரத்தை சொல்லி,  அவர்கள் சென்ற வழியையும் சொல்லி தினமும் இங்கே பாதுகாப்பு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று பேசி முடித்துவிட்டு வந்தேன். 

குறிப்பு: 

அந்த இடத்தில் இருந்து ஆண் மற்றும் பெண்கள் சுமார் 300 பேருக்குமேல் இருந்தும் ஒருவர் கூட ஏன் என்று அந்த பெண்ணுக்காக சென்று கேட்கவில்லை. இதே அவர்கள் வீட்டு பிள்ளை என்றால் இப்படி சும்மா நிப்பார்களா?  எனக்கு மனசே சரியில்லை. தப்பு நடக்கும் போது பார்த்துவிட்டு போக முடியவில்லை, என்னமோ தொண்டையில் வலிக்குது,  உடம்பெல்லாம் நடுங்குது. அந்த பெண்ணோட தாய்,  தந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க அனுப்பி இருப்பார்கள். இந்த தலைமுறையோட நாம் பட்ட கஷ்டம் போதும் நீயாவது நல்லா இருக்க வேண்டும் என்று தான் எல்லா தாயும் தந்தையும் படிக்க அனுப்பி வைக்கிறார்கள். 

நான் மீண்டும் சொல்லிவருவது மனிதர்களிடம் பேச விரும்புவதில்லை. நல்ல எண்ணம் இருப்பதில்லை,காட்டுமிராண்டி கூட்டம் அதனால் தான் உங்கள் பார்வைக்கு பைத்தியம் மாதிரி வாழ்ந்து வருகிறேன். 

நான் சென்ற மாதம் துப்பாக்கி லைசென்ஸ்க்கு விண்ணப்பிக்க போனேன். என் நண்பர் ரங்கன் தடுத்து விட்டார். நமக்கு தேவையில்லை என்று சொல்லி விட்டார். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இளைஞர்களின் புத்திசாலிதனம்

 இளைஞர்களின் புத்திசாலிதனம் ஒருவர் மூன்று மணி நேரம் வெகு சாதாரணமாக என்னுடைய நேரத்தை எடுத்துக்கொண்டு ஷேர் மார்க்கெட் பற்றி துருவி துருவி விசா...